மொழியோவியங்கள்!



வா

ர்த்தைகளால் கூடு கட்டி
மௌனங்களால் அடைகாப்போம்
நம் காதலை!







*
 
னவுகள் வருவதில்லை.
இப்போதெல்லாம்
,
இமைகளுக்கிடையில் இருப்பது

நீயல்லவா?!
*
 
ழுதியது உன் முகவரி-
மட்டும்தான்

மடல் முடிந்த சந்தோசத்தில்
மனசு!!
*
 
மைகளுக்குள் வழிகிறது
காதல் நெருப்பு.
வா

அணைத்துக் கொண்டே எரிவோம்
!!
*
 
ன் புன்னகை வைத்த
பொறிகளுக்குள்
சிக்கித் தவிக்கிறது
என் கள்ள மனசு!!
*
 
னித்திருந்தோம் மழைத் துளியாய்.
துளித்த பின்பு

சுழித்தோடுகிறது
நதியாய்
நம் காதல்!
*
 
றும்பின் நகர்வாய்
ஞாபக ஊர்வலங்கள்….
இனிப்புச் சிதறலாய்

எனக்குள்
உன் சிரிப்பு!
*
 
மொ
ழியின் முதுகில்
மௌனம் எழுதி விட்டுப் போன
காதல் கவிதையின் பேரிரைச்சல் பற்றி
நீ பாடு….
தேவதைகள் ஆடட்டும்
!!
*
 
ற்றே கொஞ்சம்
உன் நாணம் நிறுத்து!
நெஞ்சுக்குள்

பதுக்கி வைக்க முடியவில்லை
உன் கொள்ளை அழகை!
*
 
பு
ள்ளிகள் போட்ட ஆடையில்
உன்னைப் பார்த்த பிறகு
வண்ணத்துப் பூச்சிகள் ஒன்றும்
அழகாகத் தெரிவதில்லை
எனக்கு!
*
 
ழை போலதான்
இந்தக் காதலும்!
அறிகுறிகள் இல்லாமல்

சில வேளை- மனசை
தெப்பமாக்கித் தொலைக்கிறது!!
*
 
ண்ணத்துப் பூச்சியின்
இறகுகளில்
மனசு தொற்றி
ஊஞ்சலாடிக் கழிக்கிறது
நீ அருகிலிருக்கும் பொழுதுகளில்!
*
 
கா
லம் வரைந்து விட்டுப் போன
என் சித்திரங்களுக்கு
வண்ணம் தீட்டி மகிழ்கிறது
உன் காதல்!
*
 
நீ
இருண்மை அழகு.
அதிலும் அழகு

உன் கருமை!
*
 
கோ
பத்தில் அமாவாசை.
காதலில் பௌர்ணமி
.
புள்ளி போட்ட தாவணியில்

பொங்கி வழியும்
உன்னை நான்
நிலா என்கிறேன்!
*
 
தி
ருட்டுத்தனமாய்
மது நிரப்பி வைத்திருக்கும்
உன் போதை விழிகளை
முத்தம் கொண்டு
தண்டிக்கத் தவிக்கிறது
இந்த குறும்பு வயசு!!
*
 
ன் விழிகள் பாடிய
மௌனத் தாலாட்டில்
விழித்தெழுந்தது
நம் காதல்!!
*
 
நீ
திரு விழா
உன் மிட்டாய்களுக்காக
அடம் பிடிக்கிறது
என் குழந்தை மனசு!!
*
 
தா
கித்துக் கிடக்கிறது மனம்!
நதியின் முதுகில்

நடந்து வருகிறாய் நீ!!
*
 
ன்னைச் சொல்லி
உன்னையழைப்பேன்
என்ன சொல்லி
என்னையழைப்பாய்??
*
 
கா
தல் தேசத்தின்
குறுக்கு வழி
பாதை நீ!
*
 
மீ
ன்கள் எப்படி தூண்டில் போடும்?
விழிக்காதே
,
உன்

விழிகளைத்தான் சொல்லுகிறேன்!!
*
 
பு
ள்ளிகளையும், கோலங்களையும்
என் மனசுக்குள் போட்டு விட்டு
பூவை மட்டும் ஏனடி
வாசலில் வைக்கின்றாய்?!
*
 
நீ
போகும் பாதையில் மட்டுமல்ல
போகாத பாதையிலும்
காத்துக் கிடக்கிறது
உனக்காக
மனசு!!
*
 
ம் உள்ளங்கள் சேர்ந்த சேதி
ஊருக்கு மட்டும் ஏன்
வதந்தியாய் போயிற்று!?
*
 

லர்ந்து போகட்டும் நிலா..
உதிர்ந்து போகட்டும் நட்சத்திரங்கள்
..
குயில் ராகமிழக்கட்டும்
..
முற்றத்து ரோஜா
-
பூக்காமல் சாகட்டும்
..
திட்டித் தீர்க்கும் இப்படித்தான்

நீயில்லாத என் மனசு!
*
 
நீ
 நிலவாக இருப்பதில்
சந்தோசம்தான்.
அமாவாசைகளைத்தான்

தாங்க முடியவில்லை!
*
 
வி
க்கலெடுக்கிறுது..
எங்கோ பிடித்த காட்டுத் தீ

திடீரென அணைந்து போகிறது..
எதிரெதிர் எறும்புகள்

சற்றே நீளமாய்
சம்பாசித்து நகர்கின்றன..
சொல்
!
நீ என்னை நினைத்தாயா
??
*
 
மக்குள்
இடைவெளி தொலைந்த நிமிடங்களில்
நிலவை பூமி சுற்றியது,
கொடி காற்றை அசைத்தது
,
காதலின் ஜன்னல்களுக்கு பின்னாலிருந்து

நிர்வாணமாய் சிரித்தது வெட்கம்!
இது
-
பிரிவுகளற்ற காதலின்

தூரத்து..
மிக, மிக தூரத்துப் புள்ளி!!
*
 
கு
ழந்தைகளின் வீட்டருகில்
வேண்டுமென்றே ஒலியெழுப்பும்
பஞ்சு மிட்டாய்காரனாய்
உன் பாதக் கொலுசுகள்!
அடம்பிடித்து அடம்பிடித்து

அழுது கேட்கிறதுஉன்னை
என் மனசு!!
*
 
கா
வெளியில்
நம்மைக் குழைத்து
கோட்டுச் சித்திரமாய்
கிறுக்கி மகிழ்கிறது
காதல்!
*
 
ன் ஒற்றைவழிப் பாதை நீ!
உனக்கும் எனக்குமிடையில்

காதலால் நடந்து பாரக்கிறேன்!!
*
 
யிரைக் கிள்ளிநீ
உலையில் போட்டாய்!
என் மனசைத் தள்ளி

எங்கேயடி வைத்தாய்?
*
 
னக்கான மலர்களில்
தாவியெழுந்த
வண்ணத்துப் பூச்சியின்
சிறகசைப்பில் துடிக்கிறது
என் காதல் மனசு!
*
 
ன்மதப் போரின் வியூகமிது!
சுற்றி வளைக்கசுற்றி வளைக்க

சுகம் என்கிறது

மனசு!
*
 
கா
தலித்துத் தீர்ப்போம்
காத்திருந்த வலிகளை
வா!
விழிகளை மூடி

கனவுகளுள் வீழ்வோம்!
*
 
தழ் கேட்டேன்
மலர்களோடு வருகிறாய்.
மலர் கேட்டால்

இதழ் மூடிப் போகிறாய்.
காதலின் சிறு பிள்ளைத்தனம் இது!
*
 
ன்மதக் கனாக்களுக்குள்
மனம் சிக்கித் தவிக்கிறது!
பெண் உனைக் காண்கையிலே

உயிர் சொக்கித் துடிக்கிறது!!
*
 
வி
ழிகளுக்குள்
வலை வைத்து
வீசும் கலை
இது மன்மதக் கலை!
*
 
ரசிக் கொண்டன மேகங்கள்
மன்மதக் காட்டில்இனி
மழை தான்!
*
 
னது வீணை
எதையோ மீட்டினாலும்
எனது எழுதுகோல்
உன்னையே பதிகிறது!
*
 
தேன் தோட்டத்தில்
காதலாகி கனிந்து கிடக்கிறது
நமக்கான கனி;
வா கடித்துண்போம்
!
*
 
சி
ரிக்காதே
பொறுக்க முடியவில்லை
கலைந்து கிடக்கும் ஞாபகங்களை!
*
 
ன் தாகிப்பின் மேகம் நீ
உன் மேகத்தின் ஈரம் நான்!
மழையாக விழுவோம்வா

மாறி மாறி
மனதுக்குள் பொழிவோம்!
*
 
தி
றந்து விடு கதவை
உனக்குள் சிறைபடத் துடிக்கிறது
இந்த வயசு!
*
 
ருக்கட்டி கருக்கட்டி
கனவு பூக்கும் மனசு!
மகரந்தப் புன்னகையில்

மாயப்பொடி நீ கலக்க
கருக்கட்டி கருக்கட்டி
கனவு பூக்கும் என் மனசு!
*
 
ன் விழி வேட்டைக்காய்
காத்துக் கிடக்கிறது
காதல் மனசு!
நீ

வில் வளைப்பதெப்போது?
*
 
ன்மதப் போரின் வியூகமிது!
சுற்றி வளைக்க சுற்றி வளைக்க

சுகம் என்கிறது மனசு!
*
 
ற்றே கொஞ்சம்
உன் நாணம் நிறுத்து!
மனசுள்

பதுக்கி வைக்க முடியவில்லை
உன் கொள்ளை அழகை!
*

1 கருத்து: